Saturday 2 February 2013

16. மேரிக்யூரி (1867-1934)


போலோனியம், ரேடியம் இரண்டையும் கண்டுபிடித்து அறிவியல் உலகில் நிகரில்லா இடத்தைப் பெற்றவர் மேரிக்யூரி. இவரது இயற்பெயர் 'மான்யா ஸ்கோலோடாவ்ஸ்கா'.
போலந்து நாட்டின் 'வார்சா' நகரில் 07-11-1867 அன்று இவர் பிறந்தார். இவரின் தந்தை பெயர் 'பிளாடிஸ்லாவ் ஸ்கோலோடாவ்ஸ்கா'.
உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர் மேரிக்யூரி (1883). இயற்பியல் எம்.எஸ்.ஸி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் (1893). கணிதம், எம்.எஸ்.ஸி இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றார் (1894). பின்னர் இயற்பியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார் (1903). 
இவர் பாடம் கேட்ட ஆசிரியரான 'பியூரிக்யூரி' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் (1895).
'போலோனியம்' இவரால் கண்டுபிடிக்கப்பட்டது (1898). அதே வருடத்தில் குளோரினிலிருந்து 'ரேடியம்' கண்டுபிடித்தார்.
இதில் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்த பின் 'ரேடியம்' என்பது குளோரினிலுள்ள தனித்துவமான மூலக்கூறு என்பதை கண்டறிந்து வெற்றி பெற்றார் (1902).
'சார்போன்' என்னுமிடத்திலுள்ள இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1903). இவரது கணவர் 'பியூரிக்யூரி' சாலை விபத்துல் மரணம் எய்தியதும் இப்பதவியில் 'மேரிக்யூரி' அமர்த்தப்பட்டார்.
பிரேஸில்,பெல்ஜியம், ஸ்பெயின், செக்கோஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் (1918).
இவர், இவரது கணவர் 'பியூரிக்யூரி' மற்றும் 'ஹென்றி பாக்யூரல்' ஆகிய மூவருக்கும் சேர்த்து இயற்பியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1903).
லண்டனிலுள்ள 'ராயல் சொஸைட்டி' மேரிக்யூரிக்கு டேவி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு வேதியியல் பிரிவு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1911).
1931 ஆம் வருடம் வரை இவருக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலக அளவில் இவர் 'ரேடியம் லேடி' என்ற பெயரில் புகழ்வாய்ந்தவராக பாராட்டப்பட்டார் என்பது சிறப்புச் செய்தியாகும்.
இவரது மகள் 'ஐரின் ஜூலியட் க்யூரி'யும் வேதியியலுக்காக நோபல் பரிசு வாங்கியவர் (1935).
உலகப் புகழ் வாய்ந்த இம்மாதரசி இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தினார் .
அறுபத்து ஏழு ஆண்டுகள் வாழ்ந்து பிரான்ஸிலுள்ள 'சான்செல்லிமாஷ்' என்னும் ஊரில் 04-07-1934 அன்று காலமானார்.
கல்வி பெற்று, அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்று ஈடுபட்டு வரும் பெண்களின் ஆதர்ஷமாக மேரிக்யூரி விளங்கி வருகிறார் என்பது சிறப்புச் செய்தியாகும்.

குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment